மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர். அதன் விபரம்:
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் சம்பந்தமாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் அரசிடம் கீழ்க்கண்ட ஆலோ சனைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
1 உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வ தால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயி கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். எனவே, ஒன்றிய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையோடு சேர்த்து மாநில அரசும் நெல் குவிண்டாலுக்கு ரூ.3000உம், கரும்பு டன்னிற்கு ரூ.4000 உம் விலையாக அறிவித்திடுமாறு வேண்டுகிறோம்.
2 அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தேவையான அனைத்து இடத்திலும் திறந்திட வேண்டும். நிரந்தர கொள்முதல் நிலையங்களை அமைத்திட வேண்டும். சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மஞ்சளுக்கு உரிய விலை...
3தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் விளையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தனியார் நிறு வனங்கள் விவசாயிகளிடம் குறைவான விலையில் கொள்முதல் செய்து, மதிப்பைக்கூட்டி விற்பதன் மூலம் பெரும் லாபம் ஈட்டுகின்ற னர். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இது குறித்து அரசு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
காபி கொள்முதல்
4 தமிழ்நாட்டின் நீலகிரி, கொடைக்கானல், சேர்வராயன் மலைகளில் தரமான காபி விளைகிறது. மாநில அரசு “கார்பன் நியூட்ரல் காபி” அமைப்பை துவங்கி அரசே காபியை கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்து, அதன் பலன் விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டுகிறோம். சிறு, குறு, நடுத்தர காபி விவசாயிகளை ஊக்கப்படுத்திட ஒரு கிலோவிற்கு பத்து ரூபாய் ஊக்கத்தொகையாக மாநில அரசு வழங்கிட வேண்டும்.
மாநில அரசு காப்பீட்டு நிறுவனம் துவங்கிடுக!
5 ஒன்றிய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டம் பெரிய அளவில் விவ சாயிகளுக்கு பயனளிக்காமல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகள் முழுவதும் பயன்பெறும் வகையில் மாநில அரசே காப்பீட்டு நிறுவனத்தை துவக்கிட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் காப்பீடு கிடைத்திடும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
மண்திட்டை உடன் அகற்றுக!
6 நடப்பாண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கால் விளைநிலங்களில் மண்திட்டு ஏற்பட்டது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வேளாண் பொறியியல் துறை மூலமே மண்திட்டை அகற்றிட அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்கிறோம். உடன் பணிகளை துவக்கிட வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும்.
7 மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை செப்பனிடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் மற்றும் மே மாத இறுதிக்குள் தூர்வாரிடும் பணிகளை முடித்திட வேண்டும்.
கூட்டுறவு கடன் தொகையை அதிகரித்திடுக!
8 கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயத்திற்கு கடன் வழங்கு வதில் சிறு-குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தற்போது பட்டா, சிட்டா, அடங்கல் பெற்றுக் கொண்டு 1.60 லட்சம் ரூபாயும், நகை ஈட்டுக் கடனாக ரூ.3 லட்சம் வரையும் வழங்கப்படு கிறது. சாகுபடி ஆவணங்கள் மூலம் வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்து தரவேண்டுகிறோம்.
வேளாண்மைசார் தொழில் துவங்குக!
9 காவிரி டெல்டா பகுதியை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி வேளாண் சார்ந்த தொழில்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் துவக்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.
10 விவசாயத்தில் தற்போது அனைத்து வேலைகளுக்கும் இயந்திர பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வேளாண்மை பொறியியல் கல்லூரி - மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை டெல்டா மாவட்டத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் துவக்கிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தி பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக அரசு ஏற்கனவே அறிவித்தபடி அலங்கா நல்லூர், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நடப்பாண்டு கரும்பு அரவையை துவங்கிட வேண்டுகிறோம்.
கிராமப்புற மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள்...
12 மாநிலம் முழுவதும் வேளாண் சார்ந்த வேலைவாய்ப்புகள் கிராமப்புறங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு பெருமளவு குறைத்து திட்டத்தையே எதிர்காலத்தில் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வேளாண்மை சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளை கிராமப்புற மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம்.
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்
13 கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆண்டு முழுவதும் செய்வதற்கு ஒன்றிய அரசிற்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகளில் விநியோகித்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
அனைத்து வகை விளை பொருட்கள் விற்க...
14 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்திட வேண்டும். 40 வகையான விளை பொருட்க ளை விற்பனை செய்வதற்கான அனுமதி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது அதிகப்பட்சம் 14 விளைபொருட்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. (குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது). அனைத்து விளைபொருட்களும் விற்பனை செய்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்திடுக!
15 மாநிலம் முழுவதும் நன்கு விளையும் நஞ்சை நிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்கு விளை நிலங்கள் மாற்றப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்க ளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுடைய ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றிட முயற்சிக்கும் போது அரசிற்கும், விவசாயிகளுக்கும் இணக்கமற்ற சூழல் உருவாகிறது. எனவே, புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நன்கு விளையும் சாகுபடி நிலங்க ளை தவிர்த்து வேறு இடங்களில் திட்டங்களை செயல்படுத்திட வேண்டுகிறோம்.
இயற்கை வேளாண்மைக்கு தொடர்ந்து 3 ஆண்டு மானியம்
16 இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்கப்படுத்திடும் வகையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கிட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் பரவலாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.